There are no items in your cart
Add More
Add More
| Item Details | Price | ||
|---|---|---|---|
சகிப்புத் தன்மை, விட்டுக் கொடுத்தல், தியாகம், இருந்தால்தான் வாழ்க்கையில் உண்மையான மகிழ்ச்சி கிட்டும். உலகின் பொருள் வறுமையை நீக்க நீண்ட நாட்களாகப் பலரும் பலவிதமாக முயன்று வருகிறார்கள். அவர்கள் முயற்சி வீண் முயற்சியாகவே தெரிகிறது. அறிவு வறுமை நீங்காத வரையில் பொருள் வறுமையை நீக்கவே முடியாது. தேவைக்கு மேல் சேர்த்து வைப்பதும் அறிவு வறுமைதான். தனக்கு என்ன வேண்டும்? அதற்கு என்ன செய்ய வேண்டும்? என்று உணராமல் தன்மானமின்றி ஒவ்வொன்றிற்கும் மற்றவரை எதிர்பார்ப்பதும் அறிவு வறுமைதான். இந்த அறிவை ஒவ்வொருவரும் பெறாத வரையில் செய்யப்படும் சீர்திருத்தங்கள், சட்ட திட்டங்கள், போதனைகள், சேவைகள் எல்லாமே பயனற்றதாகத்தான் முடியும். எனவே முயன்று அந்த அறிவைப் பெற வேண்டியது ஒவ்வொருவரின் முக்கியமான கடமையாகிறது.