தான் என்னும் தன்முனைப்பு பற்றி வேதாதிரியம் கூற்று பார்போம்

நிலவுலகில் தோன்றிய உயிரினங்களில் சிறப்பு வாய்ந்தவன் மனிதன். ஓரறிவு முதல் ஐந்தறிவு வரையிலான விலங்குகளிடத்தில் இல்லாத பெருமை ஆறறிவாக மனிதனிடத்தில் மட்டுமே உள்ளது. பகுத்தும் தொகுத்தும் பார்க்கக்கூடிய பகுத்தறிவு அவனிடம் உள்ளதால், அவனால் சிந்தனையில் சிறந்து, பண்பில் பண்பட்டு, அறிவில் ஆண்டவனை அறிந்து இன்புற முடியும். அன்பையும் அறத்தையும் கொண்டு இந்த ஆனந்த நிலையை தானும் அனுபவித்து, பிறரும் அனுபவிக்க உதவ முடியும். இறைவனோடு இணையும் சிறப்பை மனிதன் பெற்றிருந்தாலும் ஆண்டவனை அடைய முடியாமல் செய்வது அவனிடம் உள்ள ஆணவம் என்னும் தன்முனைப்புதான். தன்முனைப்பு மனிதனிடம் அழியும்போது, அவன் தன்னை, தனது ஆன்ம சொரூபத்தை அறிந்து இன்பம் அடைகிறான். ஆணவத்திரை விலகும் போது இறைவனின் திவ்ய தரிசனத்தைக் கண்டு இன்புற முடியும் என்பது மகான்களின் கூற்றாகும்.

தன்முனைப்பு என்பது இறைவனை மறந்த நிலையில், மனிதன் தனது சிறப்பிற்கெல்லாம் காரணம் தான் தானென்று எண்ணும் எண்ணம் ஆகும். தன்முனைப்பு ஆனது கர்வம், ஆணவம், செருக்கு, இறுமாப்பு என வேறு பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. உலகைத் தோற்றுவித்து அதில் உயிர்களைப் படைத்து, அவற்றைக் காத்து, ஆண்டுகொண்டிருக்கும் ஆண்டவனை மறந்து, தனது அழகு, அறிவு, திறமை, புகழ், கல்வி இவற்றை நினைத்துத் தற்பெருமை கொள்வதே தன்முனைப்பாகும்.

தன்முனைப்பு என்பது இறைவனை மறந்த நிலையில், மனிதன் தனது சிறப்பிற்கெல்லாம் காரணம் தான் தானென்று எண்ணும் எண்ணம் ஆகும். தன்முனைப்பு ஆனது கர்வம், ஆணவம், செருக்கு, இறுமாப்பு என வேறு பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. உலகைத் தோற்றுவித்து அதில் உயிர்களைப் படைத்து, அவற்றைக் காத்து, ஆண்டுகொண்டிருக்கும் ஆண்டவனை மறந்து, தனது அழகு, அறிவு, திறமை, புகழ், கல்வி இவற்றை நினைத்துத் தற்பெருமை கொள்வதே தன்முனைப்பாகும்.

"அறிவின் மயக்க செருக்கு தான் தன்முனைப்பாகும்

இது ஒரு திரை போன்று அறிவின் ஒளியை மறைத்து நிற்கின்றது 

என்னும் வேதாத்திரி மகரிஷியின் கூற்றிலிருந்து தன்முனைப்பு நமது அறிவினை மறைத்து மயக்க நிலையை ஏற்படுத்துகிறது. இதனால் மனிதன் மயக்கம் என்னும் மாயையில் சிக்கிக்கொண்டு துன்புறுகின்றான். இந்த மாயை அவனைத் தீய செயல்களைச் செய்யத் தூண்டி, பாவப் பதிவுகளை ஏற்படுத்துகிறது என்பது புலனாகிறது. தன்முனைப்பு தகர்ந்து மனிதன் உன்னத நிலையை அடைய வேண்டும் என்ற உயர் நோக்கில் சித்தர்களும் மகான்களும் நன்னெறிகளை அருளியுள்ளார்கள்.

நிவர்த்தி மார்க்கம் மனிதனுக்கு உடனே வருமா? என்றால் வராது. ஏனென்றால் நீண்ட காலமாக, பல பிறவிகள் தோறும் செய்த வினையின் அழுத்தம் எல்லாம் சேர்ந்து மனிதனுடைய, குணநலனாக அமைந்திருப்பதனாலே, குருவினுடைய உயிர்ச்சக்தியானது விதை போன்று அவனிடம் சிறுகச் சிறுக ஊறி, அது முதற்கொண்டு சிந்தனையோடு, செயல்புரிய, செயல்புரிய நல்லதை கெட்டதைத் தெரிந்து கொள்ள, கொண்டபின் இவைகளை எல்லாம் நாம் முறைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று விளக்கம் பெற, அப்படி விளக்கம் பெற்ற பிறகு வாழ்க்கையிலே ஒரு பொறுப்புணர்ச்சி வருவதுதான் நிவர்த்தி மார்க்கம்.

ஆணவம், கன்மம், மாயை, இந்த மூன்றையும் அதிகரித்துக் கொண்டு போவது தான் பிரவிருத்தி மார்க்கம். இம்மூன்றுமே மனிதனிடமுள்ள களங்கங்கள். ஏன் இந்த ஆணவம் வந்தது? எல்லாம் வல்ல பரம்பொருள் மிகப் பெரியதல்லவா? அதுதானே மனிதனாக வந்துள்ளது? அது உருவத்தோடு வந்து ஸ்பரிசம், சப்தம், ரூபம், ரசம், கந்தம் இந்த நிலையில், உடல் வரையில் ‘நான்’ என்று எண்ணிக் கொண்டு எல்லை கட்டி நிற்கும்போது, தன்முனைப்பு மலர்கின்றது. தன் முனைப்பையே ஆணவம் என்று சொல்கிறோம்.

தன்முனைப்பிலே இரண்டு எண்ண எழுச்சிகள் ‘நான்’, ‘எனது’ என்பதாக உள்ளன. ‘நான்’ என்று சொல்லும் போது ‘நான்தான் பெரியவன், எல்லோரும் எனக்கு அடங்கி இருக்க வேண்டும், என் சொல்படித்தான் நடக்க வேண்டும்’ என்ற அதிகாரப் பற்று ஓங்கி நிற்கிறது. அடுத்து ‘எனது’. இதுதான் பொருள்பற்று, உடைமைப்பற்று, பரம்பொருளானது தன்மை குறுகிப் புலன் அளவிலே, உடல் அளவிலே எல்லை கட்டியதன் காரணமாக, தனித்து நிற்கின்ற காரணத்தாலே, தனக்குக் கிடைத்ததைப் பெரிதாக எண்ணிக் கொண்டோ, அல்லது இன்றோடு தன்னை ஒத்துப் பார்த்து, ‘பெரியது’ மற்றும் ‘சிறியது’ என மாற்றம் பெறுகின்ற நிலையினை ‘ஆணவம்’ எனச் சொல்கின்றோம்.

அவலக் குழந்தைகள் ஆறு 

இந்த ‘தான் - தனது’ என்ற இரண்டு எண்ண எழுச்சிகள் ஒரு விநோதமான தம்பதிகள் ஆவார்கள். இவர்களுக்குப் பிறக்கின்ற அவலக் குழந்தைகள் ஆறு. அவை: பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர் – தாழ்வு மனப்பான்மை, வஞ்சம். இவற்றை முறையே நிறைமனம், பொறுமை, ஈகை, கற்பு, சமநோக்கு, மன்னிப்பு என்னும் நற்குணங்களாக மாற்றிக் கொள்வதே மனவளக்கலை.

SKY YOGA Online

Vethathiri Maharishi's SKY Yoga is spread across 20 countries and has transformed over 6 million lives.
SKY is the perfect blend of Yoga, Kundalini Meditation, Intense and Practical Introspection practices that empower to lead a meaningful and fulfilled life.

PHONE: +91 7904402887 / 04253-292746

 



Launch your GraphyLaunch your Graphy
100K+ creators trust Graphy to teach online
SKY Yoga 2024 Privacy policy Terms of use Contact us Refund policy